புதன், 17 ஏப்ரல், 2013

அதிகாரம்

 காரண காரியங்களுடன் விளக்கிக் கூட்டாளிகளுக்குப்

புரிய வைத்துவிட்டால் அதிகாரிகளின்

மற்ற வேலைகள் சுலபமாகிவிடும்

அதிகாரம் என்பது மற்றவர்களை அடிபணிய வைக்கக் கொடுக்கப்பட்ட ஆயுதம் மட்டுமல்ல; கூட்டாளிகளை அறிவினால் வென்று அன்பினால் ஒன்று படுத்த உதவும் கருவி. அப்படி அதிகாரத்தை உபயோகப்படுத்தத் தெரிந்து கொண்டு பழகினால், அதிகாரத்திற்கு ஆட்படவேண்டும் என்ற நிலையில் உள்ளோருக்கு எதிர்ப்புணர்வு வராது. 

நாம் ஏன் இந்த எல்லைப் புறங்களிலும், பனிப் பாலைவனங்களிலும் வீழ்ந்து கிடக்கிறோம் என்பதைக் காரண காரியங்களுடன் விளக்கிக் கூட்டாளிகளுக்குப் புரிய வைத்துவிட்டால் அதிகாரிகளின் மற்ற வேலை சுலபமாகிவிடும். கடுமையான கட்டளைகள் கூட எதிர்ப்பின்றி பணியப்படும். அப்படியில்லாமல், அதிகாரம் என்ற அஸ்திரத்தை மட்டுமே பயன்படுத்தும்போது அவை பல சமயங்களில் முறியடிக்கப்படலாம்; அல்லது உங்கள் பக்கமே திருப்பி விடப்படலாம்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )

1 கருத்து:

  1. அன்பின்றி செய்யப்படும் அதிகாரம் ஆபத்தானதுதான்.

    உணர்ந்தேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு