புதன், 28 டிசம்பர், 2016


                                  130 mm பீரங்கி வெடிமருந்துக் கலம்.

           தென்   துருவமான  அண்டார்க்டிக்காவிலிருந்து  நான் கொண்டுவந்திருந்த கற் பாறைகளில் ஒன்றை பெங்களூரில் உருவாகிவரும் தேசிய இராணுவ  அருங்காட்சியகத்தில் வைக்க உதவ வேண்டும் என்ற கோட்பாட்டினை கேட்டபோது  நான் சற்று யோசித்தேன் .

                    சுமார் 50 கோடி வருடங்களாக  என்றுமே உருகாத சுமார் 5000மீ கணபரிமான  உறைபனிக்கிடையில் கிடந்த ஒரு டன் எடையுள்ள கற்பாறைகள் நாலைந்து நான் தமிழகம் கொண்டுவந்து " அகத்தூண்டுதல்  பூங்கா " அமைத்துள்ளது பொதுமக்கள் அறிவார்கள்.

                      அவைகளில் சற்று குறைவான எடையுள்ள ஒரு பாறையை உலக உருண்டைபோல் வடிவமைத்து  எனது வீட்டின் வரவேற்பு அறையில் சென்ற 26 வருடங்களாக வைத்திருந்தேன்.





அருங்காட்சியகத்திற்குக் கொடுக்க அதுவே சிறந்தது என்று முடிவெடுத்து எனது சம்மதத்தைத் தெறிவித்தேன்.

                இந்த  உலக உருண்டை எனது இராணுவ  வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும் .1971 இந்திய -பாகிஸ்தானிய போரில் கிழக்குப் பாகிஸ்தான் பங்களாதேஷ் என்னும் புதிய நாட்டை உருவாக்கும் போர்க்களத்தில் இருக்கும் வாய்ப்பு  எனக்குக் கிடைத்தது.

                   மின்னல் வேகத்தில் நடைபெற்ற அந்த போரில் பொறியாளர்களான எங்கள்  படைப்பிரிவுக்கு ஒரு வித்தியாசமான கட்டளை கிடைத்தது.

                      பெரும் பாலங்களையும் மிதவைகளையும் விரைவாகக் கட்டும் நாங்கள் ஒரு பெரும் மிதவையைக் கட்டி அதில் பீரங்கிப் படைப்பிரிவினரின் துணையுடன் 130mm கனரக பீரங்கி  ஒன்றை ஏற்றினோம் .

                                       Image result for 130mm guns



                      கிழக்கு பாகிஸ்தானில் படகு/கப்பல் போக்குவரத்து மிக அதிகம்.அப்படிப்பட்ட ஒரு சிறிய கப்பல் எங்கள் மிதவையை இழுத்துக்கொண்டு"மேகனா"என்ற பிரம்மபுத்திராவின் உப நதிகளில் ஒன்றின் வழியாக  டாக்காவிற்கு சுமார் 20-25கி.மீ தூரத்தில் உள்ள   "'நரசிங்கிடி "  என்ற கிராமம் வரை சென்றோம் .

                அங்கு 130mm  கனரக பீரங்கி இறக்கி  புதைக்கப்பட்டு அங்கிருந்து முதல் பீரங்கிக் குண்டு தக்கவை நோக்கி வீசப்பட்டது.இந்த பீரங்கி சுமார் 30.கி.மீ தூரம் வரை குண்டு வீசக்கூடியது.முதல் குண்டு டாக்கா  விமான நிலையத்தில் வீழ்ந்தது.பாகிஸ்தானிய இராணுவத்தலைவர் Lt.Gen.A,A.K.Niyazi போர் படைகள் தலைநகரை நெருங்கிவிட்டதை உணர்ந்து கொண்டு சரணாகதியடைய ஒப்புட்டுக்கொண்டார்.

                                        Image result for 1971 war



                            மறக்கமுடியாத இந்த அனுபவங்களின் அடையாளமாக  நான் வழங்கப்போகும் உலக உருண்டை 130mm கனரக பீரங்கியின் வெடி மருந்துக்கலத்தின் மீது பொறுத்தப்படவேண்டும் என்று விரும்பினேன்.பெங்களூர் அதிகாரிகள் எனது உணர்வைப்  புரிந்து கொண்டு அப்படியே  வடிவமைத்து எனக்குத் தெரிவித்தார்கள்.






                           இந்த உலக உருண்டையை பொருத்தமான நேரத்தில் பெங்களூர் "தேசிய இராணுவ அருங்காட்சியகத்திற்கு"வழங்கவேண்டும்.இந்த வேலைகள் முடியும்போது நவம்பர் மாதமாகிவிட்டது.

                        ஆண்டுதோறும் டிசம்பர் 16ல்  1971 போரின் வெற்றி நினைவு நாள் கொண்டாடப்படுகிறது.அன்றைய தினமே சிறந்தது என்று முடிவுசெய்யப்பட்டது.

                         அதன்படி நானும் எனது துணைவியும் பெங்களூர் சென்று கர்நாடகா  மாநில முதலமைச்சர்  சீதாராமையா  முன்னிலையில் இந்த உலக உருண்டை  வழங்கப்பட்டது.

                         பல தெலுங்கு  கன்னட செய்திதாள்களில்  இந்த செய்தி மறுநாள் வெளியாகியது.




                      மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
                                                                      கர்னல்.பா .கணேசன் VSM.
                                                                   செல்;  9444063794











ஞாயிறு, 18 டிசம்பர், 2016

                                                    The invitation
              you all may be knowing  that a National Military memorial has come up at Bangalore where historical events, equipments, personalities and other such things of the three services are displayed.
                It is basically designed to record great activities so that the present younger and the future generations will take pride of their country and self generate physical,moral and psychological strength to proove that they are second to none in this world.
                         The management of this memorial came to know of me and requested me whether one of the Antarctic stone can be displayed in the memorial.
               I had carved out a globe out of the stones I had brought and kept in my drawing room for all these days-about 26 years.I thought it would be appropriate to present that globe to the memorial. 




                Accordingly one fine morning the globe was shifted to Bangalore.
   It was later thought that a formal presentation function can be held for this.
                 In the meantime a suitable stand for the stone was designed.
            Empty Artillery shells of 130mm guns and granite slabs at the top and bottom,completely mounted on wheels were designed and executed.



            The management thought that the vijayDiwas day ie 16 December when war memorial services are held  the stone would be formaly handed over  by me to the memorial.
                Generally the Chief minister of Karnataka come for the wreath laying at the war memorial.
so it wad decided that the CM would unwiel the globe  and I present that to the memorial.






                Air come MK Chandrasekar moved heaven and earth and got everything done for the function.Myself and my wife reached Bangalore accordingly.
            MEG &Centre was kind enough to provide accn and tpt.
         The function went on very well.It was a memorable event and day for  us.


   
MEG and Centre and the great "Thambees" has played an inspiring role in my life.Needless to say that 4 Engineer Regiment which was formed by me  along with other officers in june 1966 is a land mark in my life.Out of 28 officers present at the time of formstion I was the only officer to command it.Incidently I was the first offcer to have commanded in the rank of Colonel. 
                 so it was appropriate to present one of theAntarctic  stone to MEG &Centre. 




திங்கள், 5 டிசம்பர், 2016

                                                    Build me a son.

                On 01 December I have entered the 75th year of  my life. Even though born and brought up in rural back ground  the Cosmic Forces had been kind to me to show the heavenly path.
                       I was gifted with a kind and ever loving wife and two brilliant and enterpricing sons who are on the forward march in life.
                   Elder son    G Arvindhan B.Sc,B.Tech


                  Younger son Karthik Ganesan,BE,MBA.

                               On this special occasion  I am reminded of this" SOLDIER'S PRAYER"
                 
           Build me a son o lord,who will be srtong enough to know when he is weak,brave enough to face himself when he is afraid;one who will be proud and unbending in honest defeat,humble and gentle in victory.
         Build me a son,whose wishes will not take the place of deeds,a son who will know THEE-and that to know himself is the foundation stone of knowledge.

      Lead him ,I pray,not in the path of ease and comfort,but under the stress and spur of difficulties and challenge.Let him learn to stand up in the storm;let him learn compassion for those who fail.


         Build me a son whose heart will be clear,whose goal will be high;a son who will master himself before he seeks to master other men;one who will reach into the future,yet never forget the past.And after all these things are his, add,I pray,enough of a sense of homour so that he may always be serious yet never take himself too seriously.Give him  humility,the simplicityof true greatness ,the open mind of true wisdom and the meakness of true strength.


             Then I,his father ,will dare to whisper,

                     
                             I have not lived in vain.  















                  

சனி, 26 நவம்பர், 2016

                                                        எல்லைப்புறத்தில்
                                                   ஓர் 

                                         இதயத்தின் குரல்.

             கர்னல் பா .கணேசன்  சுமார் பத்து  புத்தகங்கள் எழுதியுள்ளார் .மேலே குறிப்பிட்டுள்ளது அவரது நூல்களில் ஒன்று.
                  பொதுப்பணித்துறை அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்த அவர் ஒரு விபத்து போல இராணுவ அதிகாரியானார்.அவரது உடலளவிலும் மனத்தலளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அது எப்படி நிலை நிறுத்தப்பட்டது போன்ற அனுபவங்கள் நிறைந்தது அந்த நூல்.

                           அந்த  நூலுக்கு வாழ்த்துரை  இது.

               விருப்பு வெறுப்பற்ற ஒரு சாத்தியத்தேடல்
                        டாக்டர். வெ .ஜீவானந்தம்.B.Sc.M.B.B.S,DA
                                           தலைவர் தமிழக பசுமை இயக்கம்
                                           படிகள் படிப்பியக்கம் .
                          45.பி.கலைமகள் கல்வி நிலையம் சாலை
                                             ஈரோடு ,638001.

                     கர்னலின் நூலுக்கு வாழ்த்துரை எழுத முனையும்போது எனக்கு சற்றே  தயக்கம் ஏற்பட்டது.இராணுவம்,போர் வீரம்,வெற்றி பற்றியெல்லாம் என் பார்வை சற்றே வேறுபட்டது.எனவே இராணுவ வீரரின் நூலுக்கு நாம் எப்படி என்ன எழுதுவது என்ற தயக்கத்துடனே தான் படித்தேன்.நான் செய்ய நினைத்திருந்த விமரிசனத்தில் பெரும் பகுதியை ஆசிரியரே செய்ததில் எனக்கு நிம்மதி ஏற்பட்டது.
                  உலகின் மிகப்பெரிய   யுத்த பூமி நம்முள் இருக்கும் குருஷேத்திரமே .அதனால்தான்  போரிடு என்று அர்ச்சுனனை  ஆற்றுப்படுத்திய பகவத் கீதையை அண்ணல் காந்தி அஹிம்சை நூல் என்கிறார்.
                  உடமை வெறியும் ஆதிக்க வெறியும் உதிக்கும் ஒவ்வோர் இடத்திலும் போரும்  வன்முறையும் தவிர்க்க முடியாததாகிவிடுகின்றன.
                 எளிய கிராமிய குடும்பத்தில் பிறந்த கணேசன் கர்னலாகிறார்.



ஆனால் அடிநிலை சிப்பாய்களாகச்சேருவோர் நிலையோ பரிதாபம் என்று வருந்துகிறார்.தேசபக்தி,தேசபக்தி என்று முழங்கும் அரசியல் தலைவர்களின் படிக்காதப்  பிள்ளைகூட சிப்பாய்யாவதில்லை .வசதியற்ற ஏழைகள் பிழைப்புக்காக தம் உயிரை விலை பேசுவதாகவே அது உள்ளது என்ற உண்மையைக் காட்டுகிறார்.
                       இராணுவ வீரனும் மனிதனே.போர் அறிவிக்கப்படும்போது எல்லோருக்கும் உண்டாகும் மனப்போராட்டம் ,வேதனை,துயரம் போலவேதான் அவனுக்கும் நேர்கின்றன.வீரம்,தேசபக்தி,தியாகம் என்பனவற்றை சாதாரண மனித உணர்வுகள் வெல்லும் உண்மையை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

Image result for 1965 war


                      வரலாற்றில் சில கடிதங்கள் மறக்கமுடியாத இலக்கியமாகிவிடுகின்றன.நேரு தன்  மகளுக்கு எழுதிய கடிதம் இன்றைய தலைமுறைக்கும் உலக வரலாற்றைக் கூறும் இலக்கியமாக்கத்திகழ்கின்றன.கர்னல் கணேசனின் இந்த நூல்  பல கடிதங்களின் கோவை.இராணுவ வாழ்க்கையின் பலகூறுகளை  இது வெளிப்படுத்துகிறது.
                    தனிமனிதனின் அனுபவங்கள் சுயத்தை மிஞ்சிக்கடந்து உலகு தழுவிய பார்வை பெறும்போது அவை வலிமைபெறுகின்றன.
                     அண்மைவரைக்கூட சென்னை நகரத்தின் மையத்தில் லட்சக்கணக்கான மக்களால் தினம் தினம் பார்க்கப்பட்டு ,கடந்து செல்லப்பட்ட மத்திய சிறைச்சாலை இருந்தது.அது இடித்துத் தகர்க்கப்படும் முன்  மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.அதை பார்வையிட்டபோது ஒரு பாமரனின் மனம் எப்படியிருக்குமோ அப்படி கர்னலின் இராணுவப்பணி பற்றிய ஒளிவு மறைவற்ற படப்பிடிப்பைக் கண்டபோது எனக்குத்தோன்றியது.
                   இராணுவப் பணியைத்  தேர்ந்தெடுத்த காலம் தொட்டுப் புதிய பயிற்சிகள் பெற்று ,பதவி உயர்வுகள் பெற்று,போர்க்களத்தில் வீர சாகசம் புரிந்து,ஜனாதிபதியின் விருது பெற்று,ஒவ்வொரு நிலைகளிலும் தன்  சிறப்பைத் தான் மட்டுமே கண்டு,உணர்ந்து,மகிழ்ந்தாலும் உடன் பகிர்ந்துகொள்ள உறவுகள் இல்லாத சோகத்தை அனுபவித்தால் மட்டுமே அறியலாம் .
                      ஆனால் அந்த சோகத்தை பூனாவில் துவங்கி அண்டார்க்டிக்கா  வரை கர்னல் பெற்ற வெற்றி பின் வாங்கச்செய்து
                                      தமிழரைத் தலை நிமிரச்  செய்துவிட்டன.
         களத்திலே மோதும் போருக்கு முன்பாக நிகழும் பலப் பல முன்னேற்பாடுகளே போரின் வெற்றியை நிர்ணயிக்கின்றன.ஆயுதங்களை விட ஆயத்தங்களே முக்கியம்.கர்னலின் பொறியாளர் பிரிவு செய்துமுடிக்கும் அந்த ஆயத்தங்களும் ,ஆக்கமும்,அழிவும் தான் நம்மவர் முன்னேறவும் ,எதிரிகள் பின்னடையவும் செய்யும் வெற்றியின் வித்துக்கள்.
                கர்னலின் இராணுவ அனுபவம் வேறொன்றையும் எடுத்துக்காட்டுகிறது .அதுதான் மொழி ஆதிக்கத்தை எதிர்க்கும் வேகத்தில் ஒரு மொழியை கற்கத்தவறிய ,அந்த மொழியை கற்க விரும்புவோருக்கும்  மறுக்கப்பட்ட ஒரு தலைமுறை ஏக இந்தியாவில் எத்தகைய புறக்கணிப்புகளையும்,பின்னடைவையும் பெரும் என்கிற செய்தி.விழித்துக்கொண்ட கான்வென்ட் தமிழர்கள் பதவி பெற்று வாழ அரசுப்பள்ளிகளில் அடித்தட்டுத் தமிழன் பலிக்கடாக்களாகத் தொடர்வது  இனியும் சரியா என்று மௌனமாகச் சிந்திக்கத் தூண்டுகிறார்  கணேசன்.
                     கான்ட்ராக்டர்களின் ஊழல் பிடியில் சிக்கிய பொதுப்பணித்துறையும் போக்கு வரத்துத் துறையும் நாட்டை ஆளும் பிரதமராலேயே கண்டிக்கப் பட்டன.கணேசன் போல இன்னும் எத்தனைபேர் இந்த ஊழல் முதலைகளுக்கு இரையாக வேண்டுமோ?நேர்மையற்ற தேசபக்தி போலித்தனத்திற்குப் போடும் வேழமே.
                        நமது  நாட்டின் வட கிழக்கு எல்லையிலும் தென்மேற்கு எல்லையிலும் போர்க்களத்தில் நின்ற கர்னலின் அனுபவம் பெரிதும் மாமன்னர் அசோகரின் உணர்வுகளை ஒத்ததாகவே  உள்ளது.கொலையே தேச பக்தி என்றும் வீரமென்றும் நியாயப்ப படுத்துகிறோம்.
                       மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அநீதிக்காகப் போராடுகிறோம் என்று அறிந்தும் போர்க்களம் செல்லும் கும்பகர்ணர்களின் மன சாட்சியை உறங்கச்செய்யும் போதையே வீரம் என இலக்கியச் சான்று காட்டி கணேசன் வருந்துகிறார்.
                         மொழியால்,பண்பாட்டால்,வேறுபட்டு மக்களை மதத்தால் மட்டும் ஒன்றுபடுத்த முடியாது என்பதை டாக்கா குதிரைப் பந்தய மைதானத்தில் 93,000 பாகிஸ்தானியர் சரணடைந்த வேளையில்அசோகர் போல கணேசன் உணர்கிறார்.இதே நிலை இலங்கையிலும் உண்டாகக் கூடும் என்று எச்சரிக்கிறார்.இந்த சிந்தனை இந்தியத்தலைவர்களுக்கு  இயலாமற்போனது ஏன் ?
                       மொத்தத்தில் இராணுவம் போர் பற்றியெல்லாம் ஒரு க்வாக்கர் பார்வையுள்ள நான் ஒரு இராணுவ வீரரின் கடிதங்கள் சொல்லும் கதைகளைப் படித்து மன நிறைவு கொண்டேன்.
                       கரும் பச்சை சீருடையில் நல்ல தமிழ்ச்சொல்லாக்கம் இலக்கிய  மேற் கோள்கள் ஆழ்ந்த மன உணர்வுகள் என மொழி உணர்வு சுரக்கிறது .
                               கண்டத்தைச் சொல்லுகிறேன் -உங்கள் 
                              கதையைச் சொல்லுகிறேன் -இதைக் 
                              காணவும் கண்டு நானவும்  
                             காரணம் உண்டென்றால் 
                              அவமானம்  எமக்குண்டோ.?
          தூய விருப்பு வெறுப்பற்ற சாத்தியத்தேடலை கர்னல் கணேசன் துவக்கி யுள்ளார். இதில் விஞ்சி நிற்பது அன்பு,பாசம்,நேர்மை,மனித நேயம் .

                                          அவற்றை யார் வெல்ல முடியும்?                                                              .வெ .ஜீவானந்தம்.
                   சுமார் 160 பக்கங்கள் கொண்ட இந்த நூல் தாரிணி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
                  பிரதிகள் தேவைப்படுவோர் கர்னல் கணேசனை அணுகவும்.
                      தொ.பெ. 044-26163794
                     செல் :9444063794.






ஞாயிறு, 6 நவம்பர், 2016

                                 உங்களைச் சுற்றி ஒரு பூந்தோட்டம். 

                       அண்டை  மாநிலமான கர்நாடகாவில் உருவாகும் பொன்னி வள நதி காவிரி ஒரு காலத்தில் தனது செல்வங்களையெல்லாம் வாரி வழங்கியது தமிழ்நாட்டிற்குத்தான்.
                            கர்நாடகாவில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டியபிறகும் அவர்களது பாசன பரப்பளவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த பிறகுதான் நதிநீர் பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்து தமிழகத்தை  பாலைவனமாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.
                       விஞ்ஞான அறிவு மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ள இன்றைய நிலையில் பள்ளத்தை நோக்கி ஓடிவரும் நீரின் இயற்கைக் குணத்தை மக்கள் மாற்றியமைத்து மேடான பகுதிகளில் பாயுமாறு மாற்றினாலும் இயற்கை பொங்கி எழும்போது விஞ்ஞானம் வீழ்ச்சியடைவது தவிர்க்க முடியாது.
                    அப்படி பள்ளம் நோக்கிப்  பாய்ந்து வரும் காவேரி பல கிளைகளாகப் பிரிந்து தமிழ்நாட்டைக் குறுக்கிலும் நெடுக்கிலுமாகக் கடந்து பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டிணத்தில் கடலோடு கலக்கிறாள்.
                      தென் தமிழகத்தின் காவேரிக்கரையோரத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் பெரும்பான்மையோர் நுங்கும் நுரையுமாகப் பாய்ந்தோடும் புதுப்புனலில் நீராடி மகிழ்ந்தவர்கள் மட்டுமல்லாது வளம் செறிந்த தமிழ்மொழியிலும் மூழ்கி மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பது சரித்திரம் சொல்லும் உண்மை 

Image result for River cauvery in tamilnadu


                    பழைய தஞ்சை மாவட்டத்தின் பெரு நகரங்களான தஞ்சாவூர் ,திருவாரூர் ,காவிரிப்பூம்பட்டிணம் போன்றவை வரலாற்றின் பல காலக்கட்டங்களில் சோழப்பேரரசின் தலை நகரங்களாக விளங்கியுள்ளன.
                              இந்த மண்ணில் வீரமும் விவேகமும் தேனும் பாலும் கலந்ததுபோல் ஒன்றுக்கொன்று உறுதுணைநின்று ,பல வீர விவேக காவியங்கள் உருவாக காரண மாக இருந்திருக்கின்றன.
                              பல்லவ மன்னன் நரசிம்கவர்மனிடம் படைத்தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி.வாதாபி போரில் சாளுக்கிய மன்னன் புலிகேசியை வெற்றிகொண்ட படைத்தளபதி பரஞ்சோதி ,பின்னர் சொந்த ஊர் திரும்பி தீவிர சிவதொண்டராகமாறி பிள்ளைக்கறி சமைத்த சிறுத்தொண்ட நாயனார் என்று புகழடைந்து பெயரும் புகழும் பெற்ற ஊர் திருச்செங்காட்டாங்குடி.
                     

Image result for thiruchenkattangudi siva temple

                 சோழநாட்டை ஆண்ட தலைசிறந்த மன்னர்களுள் ஒருவர் முதற்குலோத்துங்க சோழன்.அவரது அவைப்புலவர்களுள் ஒருவர் ஜெயங்கொண்டார்.குலோத்துங்க சோழனின் புகழ் மிக்க படைத்தலைவர்களுள் ஒருவர் கருணாகரத்தொண்டைமான். அவரின் பராக்கிரமப்  போர்களில் ஒன்று கலிங்கப் போர் .





                            கலிங்கப்போரின் பராக்கிரமங்களையும் வீரர்களின் தீவிர நாட்டுப்பற்றையும் தமிழுலகம் போற்ற தென் தமிழ்த் தெய்வப் பரணி என்று புகழ் பெற்ற கலிங்கத்துப்பரணி பாடிய புலவர் ஜெயங்கொண்டார்.இவர் பிறந்த ஊர் தீபங்குடி.
                          திருச்செங்காட்டங்குடி மற்றும் தீபங்குடி என்ற இரண்டு ஊர்களும் இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் தாலுக்காவில் உள்ளன.இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 15,கி.மீ.வீரத்திற்கும் விவேகத்திற்கும் விளக்கம் அளிக்கக்கூடிய அந்த இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள ஊர் சன்னாநல்லூர். 
                           சன்னாநல்லூரில் பிறந்து வளர்ந்து இராணுவ அதிகாரியான கர்னல் கணேசன் இந்தியத் திருநாட்டின் தென் துருவ ஆய்வு தளமான தக்ஷின்  கங்கோத்ரிக்குத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
                                  பலவிதமான மருத்துவ சோதனைகளுக்குப்பிறகு அவர்தான் தலைவர் என்று அறிவிக்கப்பட்டவுடன் சன்னாநல்லூர் வந்து தான் பிறந்து வளர்ந்த வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்து ஒரு பிடி மண் எடுத்துக்கொன்டுபோய்  தென் துருவம் சென்றவுடன் ஆய்வுத்தளத்தைச்சுற்றி தூவினார்.
                       சுமார் 480 நாட்கள் பணியாற்றி  திரும்புகையில் அங்கு சுமார் 50கோடி வருடங்களாக 5000மீ  காண பரிமாண உறைபனிக்கிடையில் கிடந்த சுமார் ஒருடன்  எடையுள்ள கற்பாறைகள் நாலைந்து எடுத்து வந்து தமிழகத்தின் சில இடங்களில் அகத்தூண்டுதல் பூங்கா அமைத்துள்ளார்.





              சன்னாநல்லூர்  அவர் பிறந்த ஊர் என்பதால் அங்கு அமைக்கப்பெறும் பூங்கா தனித்துவம் கொண்டதாக நூலகம்,தியானமண்டபம்,சிந்தனை அரங்கம்,மற்றும் உந்து சக்தி முகாம்கள் கொண்டதாக இருக்கும்.
                    பேரளம் வேதாத்திரி மகரிஷி "பெரு வெளி ஆலயத்தின்" தலைவர் டாக்டர்  அழகர் ராமானுஜம் அவர்களால் 23-12-2012 அன்று சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்கா திறந்து வைக்கப்பட்டது.



                        தமிழகம் கோவில்களின் மாநிலம் என்பது எல்லோரும் அறிந்ததே.கோவில்கள் இல்லாத ஊர்களையே தமிழகத்தில் பார்க்கமுடியாது.அப்படியிருக்க சன்னாநல்லூரைச்சுற்றி கோவில்கள் இல்லாமலிருக்குமா ?
                    அதனால்தான்" உங்களைச்சுற்றி  ஒரு பூந்தோட்டம் "என்று தலைப்பிட்டேன்.சன்னாநல்லூரைச்சுற்றி மிகப் பிரசித்திப்பெற்ற கோவில்கள் இருக்கின்றன.
                    அகத்தூண்டுதல் பூங்கா வளாகத்தில் வந்து தங்கி எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்க வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறோம்.















வெள்ளி, 4 நவம்பர், 2016

                                        பார் என் மகனே !  பார் 

                    தாத்தா  பாட்டி என்று வயதானவர்களிடம் வளரும் குழந்தைகள் பெரும்பாலும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளருவார்கள்.
                   ஆனால் பெற்றோர்களும் தாத்தா பாட்டியும் உடனிருக்கவேண்டும்.அப்பொழுதுதான் பெற்றோர்களின் கண்டிப்பும் பெரியோர்களின் மன்னிப்பும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுத்து குழந்தை நல்லவிதமாக வளரும்.
             
                                             பார் என் மகனே பார்
                                             பலர் உன் நிலையில் பார்.....பார்



                                             வியப்படையாதே
                                              விரிந்த  வானம்
                                              வளைந்துன்னைக்காக்குது பார் ....பார்




                                              பயப்படாதே  பாரினில் உன்போல்
                                               சரித்திரம் படைப்பதைப் பார் ......பார்.

முழுக்க முழுக்க வயதானவர்களிடம் வளரும் குழந்தைகள் கட்டுப்பாடு இல்லாமல் சுய நலமிகளாக வளர வாய்ப்புண்டு.எல்லாம் தனக்குத்தான் என்றும் எல்லோரும் தனக்காக வேலை செய்ய வேண்டும் என்றும் அவன் வளரலாம்.
                  பெரியார்  ஈ.வே.ரா. முழுக்க முழுக்க அவர் பாட்டியிடம் வளர்ந்தவர்.
மிகவும் வசதி படைத்த பெரும் பணக்கார குடும்பம்.ஈரோட்டில் புரட்சிகரமாக வாணிபத்திலும் சமூகப் பணியிலும் இருந்த அவரை அரசியலுக்கு இழுத்தவர் சேலத்தில் இருந்த சி.வி.ராஜகோபாலாச்சாரியார் தான்.
                     வளரும் குழந்தைகளுக்கு அன்பும் கண்டிப்பும் கால  நேரமறிந்து குழந்தைகளின் மனநிலையறிந்து வழங்க வேண்டும்.
                          ஒவ்வொரு குழந்தையும் அதன் கர்ம வினைகளுக்கேற்பவே  பிறப்பெடுக்கிறது.
                    .சம்பிரதாய முறையால் தந்தையாகப்பட்டவன் சுக்கிலப் பையினுள் ஒருகோடியே ஒன்பது லட்சத்து அறுபதினாயிரம் கணப்பொழுது  தங்கும் உயிர் அவனது கருணையினால் (காமமல்ல )சம்பிரதாய முறையால் தாயானவளின் சோணிதப்பையின்கண் வந்தடைகிறது.அங்கு ஆறுகோடியே நாற்பத்தெட்டு லட்ச கணப்பொழுது அவளது கருணையினாலும் கர்ம வினைகளினாலும் வளர்கிறது.
                     மாணிக்கவாசகரின் "போற்றித்திருவகவல்" திருவாசக வரிகள் இங்கு குறிப்பிடத்தக்கது.
                             மனுடப்பிறப்பினுள் மாதா  உதிரத்து
                             ஈனம் இல் கிருமிச் செருவினுள் பிழைத்தும்
                             ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
                              இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
                             மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
                             ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
                              அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
                               ஆறு திங்களில் ஊறு  அலர் பிழைத்தும்
                              ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
                               எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்
                               ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
                               தக்க தசமதி தாயொடு தான்படும்
                              துக்க சாகரம் துயரிடைப்  பிழைத்தும் .....
            இப்படி எண்ணற்ற துன்பங்களிலெல்லாம் பிழைத்து தெய்வம் என்னும் சித்தம் உண்டாகும்போது  அவன் நல்வாழ்வு வாழ முற்படுகிறான் .      
                                வாலிப வயது வரை தாத்தா பாட்டியுடனிருக்கும் குழந்தைகள் பேரதிர்ழ்ட்டசாலிகள்.ஆகா ! எது செய்தாலும் தவறு இல்லை என்னும் தாத்தா பாட்டியுடன் கொஞ்சிக்குலாவி வளர்ந்தவர்கள் எப்படி மாறுவார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
                                     காலம் தான் அவர்களை அறிமுகப்ப படுத்தவேண்டும் .
        தாத்தா பாட்டியின் 80தாவது வயது பூர்த்தியும் ஆயிரம் பிறை கண்டவர்கள்  என்ற விழாவையும் காணும் பேரக்குழந்தைகளின் பூரிப்பு மற்றவர்களுக்கு கிடைக்காத அனுபவம்.




                                                                வாழ்க வளமுடன்.





   

  

திங்கள், 24 அக்டோபர், 2016

                                        Farewell not Goodbye.
            இடைக்காலப்  பிரிவேயன்றி 
                    இறுதி வணக்கமல்ல .

  இராணுவம்      ஒரு பாரம்பரிய புகழும்  பெருமையும் கொண்ட அமைப்பு என்று பார்த்தோம் .இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பெற்ற வெற்றிகளையும் விருதுகளையும் இன்றளவும் எல்லா இராணுவ அமைப்புகளும் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றன.
                     இராணுவ  அதிகாரிகள் தங்களது தன்னிகரற்ற திறமையால் ,அறிவு வெளிச்சத்தினால் படைப்பிரிவுக்குப் புகழும் பெருமையும் சேர்க்கிறார்கள்.
                            நாள்தோறும் மாறிவரும் சுற்றுப்புற சூழ்நிலை சமுதாய மாற்றங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு அதிகாரிகள் படைப்பிரிவை வழிநடத்திச் செல்லவேண்டும்.
                     ஆனால் பெரும்பாலான அதிகாரிகள்  எதற்கு வம்பை விலைக்கு வாங்கவேண்டும் என்று பழைய தடத்திலேயே சென்று விட்டு ஓடிவிடுவார்கள்.
                       கணேசன் கிராமப்புற சூழ்நிலையில் வளர்ந்தவர்.அவரது படைப்பிரிவினர் கேரளா,தமிழ்நாடு,ஆந்திரா  மற்றும் கர்நாடகா மாநிலத்தைச்சேர்ந்தவர்கள்.ஆகையால் அவர்களோடு இணைந்து செயலாற்றுவதில் ,அவர்களைத்  தனித்திறமை வாய்ந்தவர்களாக  உருவாக்குவதில் பெருமகிழ்ச்சியடைந்தார்.
                        ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இராணுவத்திலிருந்து ஒய்வு பெறுகிறார்கள்.இளமையையும் எழிலான வாழ்க்கையையும் இந்த நாட்டிற்கு வழங்கிவிட்டு  சிவில் வாழ்க்கைக்குத் திரும்பும் அவர்களுக்கு பிரிவு உபசார விருந்து ஒன்று நடக்கும்.
                        அத்துடன் அவர்களது இராணுவத்தொடர்பு முடிந்துவிடும்.
                            இங்குதான் கர்னல் கணேசன் சில மாற்றங்களைக்  கொண்டுவந்தார்.
                 சுமார் 18 வயது முதல் குறைந்தது 40 வயது வரை எல்லைப்புறங்களில் எதிரிகளுடனும் இயற்கைக் கொடுமைகளுடனும் போராடிய இவர்களுக்கு சில மணி நேர பிரிவு உபசார  விருந்துடன் வீட்டுக்கு அனுப்பி விடுவது சரியல்ல என்று நினைத்தார்  அன்றைய மேஜர் கணேசன்.
                     இராணுவத்தினரின் பிரிவு உபசார விருந்து ஒரு நிரந்தர பிரிவின் ஆரம்பம் இல்லை.அந்த விருந்துக்கு

                                                 Farewell not goodbye

             என்று பெயரிட்டார்.அதாவது இராணுவத்தினரின் ஒய்வு ஒரு

இடைகாலப் பிரிவேயன்றி  இறுதி வணக்கமல்ல.









             உற்றார் பெற்றோர்   உறவுகள் பிரிந்து கல்லோடும் மண்ணோடும் கலந்து இந்தியதிருநாட்டின் எல்லைப்புறங்கள் மட்டுமல்லாமல் இந்த நாட்டின் சார்பாக பல அயல் நாடுகளிலும் செஞ்சொற்றுக் கடன் தீர்த்த இந்தக் கடமை வீரர்களுக்கு  வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கக்கூடிய விதத்தில் அவர்களது பிரிவு உபசார விருந்து இருக்கவேண்டும் என்று விரும்பினார் கணேசன்.
                    ஒரு படைப்பிரிவு அதன் அங்கத்தினர்களை மிக சாதாரண பணியாளர்கள் போல் நடத்தக்கூடாது.அந்த உறவு  குருதி கலந்து இறுகியது.அதன் உறுப்பினர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த படைப்பிரிவினுடன் தொடர்பு கொள்ளவேண்டும்.
                    அதனால் இந்த நிகழ்வு இடைக்காலப்  பிரிவுதான் இறுதிவணக்கமல்ல.ஒய்வு பெரும் ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த படைப்பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.
               படைப்பிரிவுடன் அவர் பணி யாற்றிய காலங்களின் தொகுப்பாக ஒரு ஓரங்க நாடகம் போல் நடத்த மலரும் நினைவுகளில் அவர் மயங்க பிரிவு உபசார விழா பிரியா விழாவாக நிறைவுபெறும்.
                           1980-82ல் கணேசன் ஆரம்பித்த இந்த விழா இன்றளவும் மிகவும் சிறப்பாக அந்த படைப்பிரிவினர்கள் நடத்துகிறார்கள் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

























வெள்ளி, 21 அக்டோபர், 2016

                          இன்றைய  நிகழ்வே  நாளைய  வரலாறு !
                                          வாருங்கள் ,
                      வருங்கால சமுதாயத்தினருக்கு
                                   வரலாறு படைப்போம்  !
   
                       நிகழ்வுகள்தான்  சரித்திரமாக உருவாகிறது. சிந்தித்து  சீர்தூக்கிப்  பார்த்து  செயல் படுத்தப்படும் நிகழ்வுகள் காலத்தால் அழியாத கல்வெட்டுகளாக உயர்ந்து நிற்கும்.
                    இராணுவம் பல பாரம்பரிய  பெருமைகளைக்கொண்டது.ஒவ்வொரு படைப்பிரிவும் தங்களுக்கென சில போர்க்கள சின்னங்களையும் சம்பிரதாயங்களையும்  காலம் காலமாகக்  கடைப்பிடித்து வருகின்றன.
            இராணுவத்தில் நேரிடையாகப் போரிலே  பங்கு கொள்வோர் என்றும் அவர்களுக்கு உதவி செய்வோர் என்றும் இரு பெரும் பிரிவுகள் உள்ளன.
                    Armoured corps,Artillery.Engineers ,Signals,and Infantry
ஆகிய படைப்பிரிவுகள்  நேரிடையாகப்  போரில் பங்கு கொள்ளும் அதிர்ஷ்டசாலிகள் .
           இராணுவத்தைப்பற்றி  முன்பின் அறிந்திராத கணேசன் ஒரு விபத்து போல் இராணுவத்தில் சேர்ந்தது மட்டுமல்லாமல் மிகவும் கௌரவமான அதிகார வர்க்கத்தின் முதல் படியில்  ஏற்றி நிறுத்தப் பட்டிருந்தார்.
                       இராணுவத்தின் செயல் பாட்டு முறைகளை  மிகவும் உன்னிப்பாகக்  கவனித்து வந்த கணேசன்  தன்னை ஒரு தகுதி வாய்ந்த தலைவனாக உருவாக்கிக்கொள்ளத்  தவறவில்லை.
                          அவரது செயல்பாடுகள்  இராணுவப்  பாரம்பரிய பெருமைக்கு மெருகூட்டி  புதிய தடம் பதித்தன.
Un Known Soldiers Day. 

                        போர்க்களத்திலே  வீர சாகசம் புரியும் மாவீரர்களை எல்லோரும் அறிவார்கள்.ஆனால் அவர்களை விட அதிகமாகப் பல செயல்கள் புரியும் வீரர்களை இந்த சமூகம் தெரிந்துகொள்வதில்லை.

                                மனம்  கொண்ட துணைவர்க்கு                  
                                             விடை தந்து வேல் தந்த மறக் குலப்பெண்கள்
                                                         
                                                                                 தாம்  அவர்கள்.
                  அறிந்தோ அறியாமலோ இராணுவத்தினரை மணக்கும்  பெண்கள் அவர்களது கணவரை விட பெரும் போர் நடத்துகிறார்கள்.
                         எல்லை பாதுகாப்புப் பணியில் ஒருவன் வீரமரணம் அடைய நேர்ந்தால் அவனது குடும்பத்தைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்.இங்குதான் கர்னல் கணேசன் தடம் பதித்தார் .
இராணுவப் பணி  பெரும்பாலும் ஒரு கூட்டு முயற்சி.அதில் ஒருவன் உயிர்த் தியாகம் செய்யநேர்ந்தால் அவனது செயல் பலராலும் பாராட்டப்பட்டு அவனது ஈமச் சடங்குகள் மரியாதையுடன் செய்யப்படுகிறது.






                      அனால் ஒரு சில நாட்கள் சென்று அவனது மனைவி மக்களைப் பார்த்தோமானால்  அது விவரிக்க முடியாத சோகக் கதையாக இருக்கும்.
                         கணேசன் அந்த சோகக் கதைகள் தொடரக்  கூடாது என்று முடிவெடுத்தார்.
                       அப்படிப்பட்ட  நிகழ்வுகளுக்குள்ளான பெண்களை
           
                                        Un Known Soldiers

என்று  அறிமுகப்படுத்தினார்.இராணுவத்தினரின்  குடும்பமே அறியப்படாத வீரர்கள் என்று பிரகடனப்  படுத்தினார் .
                     இராணுவத்தினரை மணக்கும் பெண்களைக் கௌரவிக்கும்  ஒரு  நிகழ்வாக இந்த விழா 1981-82ல்  நிகழ்த்தப்பட்டு படைப்பிரிவு தளங்களில் கணவரோடு வசிக்கும் அவர்கள் ஒவொருவரும்  முன்னிறுத்தப்பட்டு கௌரவிக்கப் பட்டர்கள்.



             1981-2ல்  பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் என்ற  இடத்தில்  நடத்திய UN  KNOWN  SOLDIERS DAY  நிகழ்வுக்கு  வந்திருந்தவர்கள்.
                            அன்றய  படைப்பிரிவு தலைவர்  COLONEL.B.S.Guraya (டர்பன் கட்டியிருப்பவர் ) அவர்களின் இரு புறமும்  கர்னல் கணேசனும் அவரது துணைவியாரும்.
                        இன்று சுமார் 37 வருடங்களாகத்  தொடர்கிறது  அந்த விழா.
அடுத்து  கணேசன் அறிமுகப்படுத்தியது

                                         FAREWELL NOT GOODBYE

                இது பற்றிய  விபரங்களை அடுத்த  பதிவில் பார்ப்போம்.



























திங்கள், 10 அக்டோபர், 2016

                                      கணேசன் என்பது யார் ?
                கர்னல் பாவாடை கணேசன் என்ற எனது பதிவுகளைப்  படித்துவரும் நண்பர்களும்   எனது  pavadaiganesan.com என்ற வலை தளத்தைப் பார்த்துவரும் நண்பர்களுக்கும் "யார் இவன் ; வித்தியாசமானவனாகத் தெரிகிறதே" என்ற எண்ணம் எழுந்திருக்கலாம்.
                             ஆம்!எனது வாழ்க்கைப் பாதையில் சற்று  பின் நோக்கி நடந்து பார்த்தால் விளக்கம் கிடைக்கிலாம்.
                    திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் தாலுக்காவில் உள்ள அன்றைய சிற்றூர்  சன்னாநல்லூர்.இன்று அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டது .இன்னமும் விரிவாக்கப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரு நகரமாக இது உருவாகலாம்.




             நன்னிலம் என்ற ரயில் நிலையம் இருப்பது சன்னாநல்லூரில்.
                             அன்றைய அந்த சிற்றூரிற் பிறந்து வளர்ந்து பொதுப்பணித்துறையிலும் பின்னர் இந்திய இராணுவத்திலும் தன்னிகரற்ற தலைவனாக உயர்ந்து இந்தியத் திருநாட்டின் தென் துருவ ஆய்வு தளம் தக்ஷிண் கங்கோத்ரியின் குளிர்காலக் குழு தலைவனாகப்  பணியாற்றி  குடியரசுத்தலைவரின்"வஷிஷ்ட்ட சேவா மெடல் "விருது பெற்றவர் கணேசன்.

கணேசன் பிறந்து வளர்ந்த தெரு,குளம் மற்றும் அவரது வயல்.




                                இந்த செய்தி 1989ல்  பல ஊடகங்களில் வெளியாகியிருந்தது.இதைப்பற்றி அறிந்த தஞ்சாவூர் மனிதர் ஒருவர் "அப்படியா? என்று ஆச்சரியப்பட்டு கணேசனை வாழ்நாளில் ஒருமுறையாவது கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.
                 சுமார் 10 ஆண்டுகளுக்குப்பின் தஞ்சாவூரிலிருந்து "திருச்செங்க ட்டான் குடி"புறப்பட்ட அவர் வழியில் சன்னாநல்லூரைப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டார்.
                    ஆகா ! கர்னல் கணேசன் பிறந்த ஊரல்லவா என்று மகிழ்ந்து அவரைப் பற்றியும் அவரது பெற்றோர் ,குடும்பம் பற்றி விசாரித்திருக்கிறார்.ஊர் மக்கள் அப்படி யாரும் இந்த ஊரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
                     அண்டவெளி  ஒரு மாபெரும் சக்தி பீடம் .நமது மூளைப் பகுதியில் உள்ள  "பீனியல்"சுரப்பி ஒரு தொலைத்தொடர்பு மையம்.இதில் பதிவாகும் கேள்விகளுக்கு விண்ணிலும் மண்ணிலும் எங்கும் தேடி அதற்கு விடை கொண்டுவந்துவிடும்.
                      காலம் சுழன்றது.தஞ்சாவூர் மனிதர் கணேசனை மறக்கவே இல்லை.சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கணேசன் ரயிலில் 2Tier A/Cயில் பகல் வேளையில் சன்னாநல்லூர் போகப் பயணித்துக்கொண்டிருந்தார்.வண்டி விழுப்புரம் தாண்டுகையில் கம்பார்ட்மெண்ட் உள்ளேயே இங்கும் அங்கும் நடந்து தனது இருக்கையை விட்டு வேறு ஒரு இடத்தில்உட்கார்ந்தார்.
                            எதிரில் சுமார் 70-75 வயது முதியவர் வெளிப்பக்கம் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். வண்டி கிட்டத்தட்ட காலி.கணேசனே பேச்சை ஆரம்பிக்கிறார்.
                     அய்யா !கையில் என்னவோ "ஒய்வு ஊதியோர் பத்திரிகை" வைத்திருக்கிறீர்களே ,நீங்கள் ஒய்வு பெற்றவரா ?
                          பெரியவர் சற்று திரும்பிப் பார்த்து "ஆம்"என்கிறார்.
              நானும் இராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவன்தான் .
          அண்டவெளியில் சற்று சலசலப்பு !அவரது பீனியல் சுரப்பி பிரகாசிக்கிறது.
             கண்கள் மின்னுகின்றன.
                             சார்! சில ஆண்டுகளுக்குமுன் தென் துருவம் சென்று வந்த சன்னாநல்லூரைச்சேர்ந்த ஒரு இராணுவ அதிகாரியை பற்றி விசாரித்தேன் .அப்படி யாரும் அந்த ஊரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
                               நீங்கள் இராணுவ அதிகாரி என்கிறீர்களே உங்களுக்கு கர்னல் கணேசனத்தெரியுமா?
                       அண்டவெளி என்ற சக்தி பீடம் அதிர்ந்து சிரித்தது.
                கணேசன் அப்படியா என்று சொல்லிவிட்டு எழுந்து போய் தன்னிடமிருந்த ஒரு தன விளக்க நூலை எடுத்துவந்து பெரியவரிடம் தந்தார்.
                          அடையாளம் கண்டுகொண்ட பெரியவர் கைகள் நடுங்க கணேசனைக் கட்டிப்  பிடித்துக்கொண்டார்.
                          தான் பிறந்து வளர்ந்து 15-16 வயதுவரை வாழ்ந்த ஊரில் யாருமே என்னைப் பற்றி நினைவு கூறவோ பெருமைப் பாடவோ இல்லையா?
                      நமது செயல்பாடுகள் மக்கள் மனதிலே நிற்பதோடு அல்லாமல் அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக உந்து சக்தியாக காலம் காலமாக நிலைத்திருக்கவேண்டும்.
                            அப்படி உருவானதுதான்"அகத்தூண்டுதல் பூங்கா."



 சன்னாநல்லூரில் அவரது சொந்த நிலத்தில் அவரது தம்பி கலியமூர்த்தி உதவியுடன் ஆறு கோண வடிவில் அகத்தூண்டுதல் பூங்கா வேலைகள் ஆரம்பமாகின்றன.
                     பேரளம்  வேதாத்திரி மகரிஷி  பெருவெளி ஆலயத்து தலைவர்  டாக்டர்  அழகர் ராமானுஜம் அவர்கள் 23-12-2012 அன்று அகத்தூண்டுதல் பூங்காவைத்  திறந்த வைத்து உரையாற்றினார்.

பெருமை மிகு நண்பரும் என்னை எனது பிறந்த ஊரிலேயே  அறிமுகப்படுத்திய தஞ்சாவூர் "தங்கமுத்து" அவர்களும் நண்பர் திருநாவுக்கரசும்.
              தம்பி கலியமூர்த்திக்குப் பொன்னாடைப் போர்த்தி மகிழும் அண்ணன்  கணேசன்.
பேரளம் பெருவெளி ஆலயத்தில் அகத்தூண்டுதல் பூங்கா.

                 தமிழ்நாட்டில் சன்னாநல்லூர்,பேரளம் ,சென்னை ஆகிய இடங்களிலும் பெங்களூருவில் M.E.G &CENTRE
                                                         பெங்களூரு M.E.G&Centre
             


சென்னை  943,17வது மெயின் ரோடு ,அண்ணாநகர் என்ற கணேசனின் வீட்டு முன்னால் .


     உலக  உருண்டைபோல் வடிவமைக்கப்பட்ட  மற்றோரு கல் பெங்களூருவில் அமையவிருக்கும் Military Museum of India வில் இடம்பெற  
கணேசனின் தென் துருவ கல் எடுத்துச் செல்லப்படுகிறது.
                 சுமார் 50 கோடி வருடங்கள் 5000மீ கனபரிமான உறை பனியில் கிடந்த இந்த பாறைகள்  தெற்கு பசிபிக் மகாசமுத்திரம் ,தெற்கு அட்லாண்டிக் மகாசமுத்திரம் சந்திக்கும் தெற்கு மகாசமுத்திரம் வழியாக இந்தியப் பெருங்கடல் ,அரபிக் கடல் தாண்டி கோவா துறைமுகம் வந்து பின்னர் தரை மார்க்கமாக இந்த இடங்களுக்கு ஒரு தனி மனிதனால் கொண்டுவர முடிந்தது என்றால்..........



                இந்த அகத்தூண்டுதல் பூங்கா பார்ப்போர் மனதில் உந்து சக்தியைக் கொடுத்து சாதனைப் புரியத்  தூண்டும் என்று எதிர் பார்ப்போம்.

                                வாழ்நாளில் ஒருமுறையாவது ஏதாவது ஒரு அகத்தூண்டுதல்  பூங்காவிற்கு  சென்று வாருங்கள்.
                           
                           உங்கள் வாழ்க்கை  வளமாகும்.








































ஞாயிறு, 9 அக்டோபர், 2016

Mind is the master

                              மன மலர் கொய்து மஹேச                                 பூஜை செய்யும் .

                                 எனது  பதிவு"இதுவுமல்ல அதுவுமல்ல ,ஓம் "என்ற கட்டுரையை நண்பர்கள் படித்திருக்கலாம்.கேரளத்து ஆன்மீக பெருந்தகை "நாராயண குரு " அவரகளின்  "ஆத்ம உபதேச சதகம் " என்ற நான்கு வரிகளுக்கொன்றாக நூறு பாடல்களின் நானூறு வரிகளுக்கு அவரது வழித்தோன்றல்  குரு "நித்ய சைத்தன்ய யத்தி "சுமார் ஆயிரம் பக்கங்களுக்கு தந்திருக்கும் விளக்கமே "இதுவுமல்ல அதுவுமல்ல  ஓம்."என்ற நூல்.
                           மனித மனம் புற உலகம் ,அக உலகம் என்ற இரண்டுக்குமிடையே  போராடுவதே மனித வாழ்க்கை .
                 புற உலகினைப் புரிந்துகொள்ள உதவும் கண்ணாடி ஐம்பொறிகளான மெய் ,வாய் ,கண் ,மூக்கு ,செவி.
            இந்த ஐம்பொறிகளும் தெரிவிக்கும் செய்தி அக உலகில் என்ன என்ன வேடிக்கைகளை நடத்துகிறது என்று பார்க்கலாம்.


Image result for structure of human mind





                      பெரும் பாலானவர்கள் இந்த ஐம்பொறிகளின் தேவையைப் பூர்த்திசெய்வதுதான்  வழக்கை என்று நினைக்கிறார்கள்.
                         நாள் முழுவதும் பொய்,ஏமாற்று, நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு மலையில் நவராத்திரி பூஜை செய்கிறார்கள்.
                      இன்றைய தமிழ் நாட்டின் நிலை ஒரு ஒருங்கிணைந்த கொலைக்களம் போலிருக்கிறது.யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
                     அரசாங்க அதிகாரிகள் தற்கொலை,பள்ளி மாணவன் ஆசிரியரைக்கொலை செய்வது,கணவன் மனைவியை /மனைவி கணவனைக் கொலை செய்வது ,கோடிக்கணக்கில் பண மோசடி ,நம்பிக்கை துரோகம் ,கையூட்டுக் கலாச்சாரம்  போன்றவைகள்தான் அன்றாட நிகழ்வுகள்.
                           கொள்ளையடித்தப் பணத்தை நன்றாகப்  பூட்டிவிட்டு கோவில் தர்மகர்த்தா என்றமுறையில் கும்பாபிழேகத்திற்க்கு சென்று வந்தால் வீடு திறந்துகிடக்கிறது.(மேலும்  விவரிக்கத்தேவையில்லை)
                  இங்குதான் நாராயணகுரு மன மலர் கொய்து  மஹேசனுக்குப் பூஜை செய்யுங்கள் என்கிறார்.
                    மனம் என்ற தோட்டத்தை நாம் பண்டைக்கால விவசாயிகளைப்போல் (?) பராமரிக்க வேண்டும் .அந்த மலர்களைக்கொண்டு  அர்ச்சனை செய்யுங்கள் என்கிறார்.நவராத்திரி ,ஆயுதபூஜை என்றால் பூ விலை பல மடங்கு உயர்ந்துவிடும்.ஏன் புற  உலகப் பூக்களை தேடுகிறீர்கள் .?
அக உலகத் தோட்டம் பாழடைந்தவர்கள் தான் பூக்களைத் தேட

வேண்டும் .
                 எந்த கோவிலுக்கு சென்றாலும் கூட்ட நெரிசல் தாங்கமுடிவதில்லை.திருப்பதி ப்ரமோத்வச விழாவில் சிலர் நேரிடையாக மோட்சத்திற்கு (?) சென்று விட்டார்கள் .
                  இப்படிப்பட்ட அறிவு சூன்யங்களுக்குகாகவே நமது முன்னோர்கள்

                    மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்,
                    மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்,
                    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்,
                    மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே !

            என்று எழுதி வைத்தார்கள்.
                              நமது கல்வியின் நோக்கம் "கைநிறையப் பொருளீட்டல்" என்றாகிவிட்ட பிறகு மனமாவது  மந்திரமாவது.
                       ஆனாலும் சில நல்லவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழகத்தை மீட்டுக் கொண்டுவர  முயற்சிக்கிறார்கள் என்பது ஒரு நல்ல செய்தி.
                  மனமெனும்தோட்டத்தில்  விளையும் சந்தன முல்லைகளைக் கொண்டு மனசாட்சி என்ற அந்த மகேசனுக்குப்  பூஜை செய்வோம் வாருங்கள்.
               
               





























ஞாயிறு, 2 அக்டோபர், 2016

ELLAIP PAATHUKAAPPU.

                               ல்லை பாதுகாப்பு என்பது 
             காலை 9 மணி-மாலை 5 மணி                                  வேலையல்ல.
            இராணுவப் பணி  இராணுவத்தினருடன் சம்பந்தமில்லாதவர்கள்  எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதில்லை.அதனால் தான் பல படித்த முட்டாள்கள் கூட  இராணுவத்தினரின்  ஊதிய முக்கியத்துவங்களை  காகிதக் கணக்கீடுகளுடன்  ஒப்பிட்டு பேசுகிறார்கள்.

Image result for indo pak border clashes


                        ஒன்றரை வருடங்கள் இந்த உலகின் கீழ்க்கோடியான  தென்துருவதில் பணியாற்றும் வாய்ப்பு  எனக்கு கிடைத்தது.மிகவும் மகிழ்ச்சியுடனும்  பெருமையுடனும்  உற்றம்  சுற்றம் மனைவி  மக்களைப் பிரிந்து அங்கு பணியாற்றிக்கொண்டிருக்கையில்  புதிய குழுவினர் எங்களது சில கடிதங்களுடன்  எங்களது பணி  முடியும் தறுவாயில் அண்டார்க்டிகா வந்தனர்.
                      மகா ராஷ்ட்டிரா விலிருந்து  ஒரு B.Sc பட்டதாரி  எங்களுடனிருந்த அவரது அண்ணனுக்கு (விஞ்ஞானி )எழுதியிருந்த  கடிதத்தில் இரண்டு நாட்கள்  அவசர விடுப்பில் வீட்டுக்கு வந்து போகும்படி எழுதியிருந்தார்.
                      இதைப்  படித்தவர்கள் வாய்விட்டு சிரிக்கையில்  தலைவன் என்றமுறையில் என்  நெஞ்சில் உதிரம் கொட்டியது.

Image result for dakshin gangotri indian antarctic station


                       அண்டார்க்டிகா என்பது எங்கிருக்கிறது,அங்கு ஒன்றரை வருடங்கள் பணியாற்ற எவ்வளவு உடல்,மன திண்மை வேண்டும் என்பதை 
உணர முடியாத படித்த முட்டாள்கள் நிறைந்த இந்த நாட்டிற்க்காகவா  நான்
இத்தனை சிரமங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளேன்?
             உலகிலேயே கொடுமையான குளிர் 5000மீ.கனமான உறைபனி ,மணிக்கு சுமார் 300கி.மீ  வேகத்தில் வீசும் நிற்கவே நிற்காத பனிக்காற்று  நிறைந்த உலகை இந்த முட்டாள்கள் கற்பனை செய்து  உணரமுடியவில்லையே.
                 அதே நிலையில் தான் இன்றைய அறிவு ஜீவிகள் இருந்துகொண்டு இராவணுவத்தின் பணியை மற்ற மத்திய அரசு பணிகளுடன் ஒப்பிடுகிறார்கள்.
                  இந்திய மக்களின் நினைவுகளில்  சமீபத்திய நிகழ்வுகள் பசுமையாக இருக்கும் என நினைக்கிறேன்.
                       உரி பகுதிகளில் நடந்த நிகழ்வுகளும் அதற்கு இந்திய இராணுவம் கொடுத்த பதிலடியும்  நமது மக்களிடையே இருந்த தூக்கத்தை சற்றே  கலைத்திருக்கிறது என நினைக்கிறேன்.

Image result for uri operation




                          எல்லை பாதுகாப்புப் பணியும்  மனிதர்களை மிருகங்களை விட கேவலமாக,கொடூரமாக  போர்க்கைதிகளின் நடத்து விதிகளைக் காலில் போட்டு மிதிக்கும் நமது அண்டைநாட்டு நடைமுறைகளும் இந்திய ஆட்சிப்பணியாளர்கள்  அறிந்திராதது.
                      நமது மக்களுக்கு நமது இராணுவத்தினரின் எல்லை பாதுகாப்புப் பணி பற்றிய எண்ணங்களும் அதனால் ஏற்படும்  உணர்வுகளும் சரியாக இல்லை என்பதன் அடையாளமே "ஒரு ரேங்க் ஒரே ஓய்வு ஊதியம் "என்று போராடிய முன்னாள் இராணுவத்தினரின் கோரிக்கை இன்னமும் முடியாமலிருக்கிறது.
                  கார்கில் போரின்போது பாகிஸ்தானியரிடம் பிடிபட்ட லெப்டினன்ட் காலியாவையும் அவரது சகாக்களையும் உயிரை வைத்து உடலை சிதைத்தார்கள் என்ற உண்மை நமது மக்களிடையே ஒரு அதிர்ச்சியையும் அதன் காரணமாக ஒரு பூகம்பத்தையும் ஏன்  ஏற்படுத்தவில்லை.
                      பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக  அறிவிக்கக் கோரி காலியாவின் தந்தை இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்.அது என்னவோ தனிமனித போராட்டம் என்று நமது மக்கள் உணர்வுகளற்று போய்க்கொண்டிருக்கிறார்கள்.
                   நமது "அறுவை சிகிச்சை" போருக்குப்  பின் இன்று இந்திய எல்லைப்புற வாழ்க்கை எப்படிஇருக்கும் என்று இராணுவம் அல்லாத மக்கள் அறிவார்களா?
                         நித்திய கண்டம் பூரண ஆயுள் .
          செத்துப் பிறக்கும் குழந்தையை வெட்டிப் புதைக்கும் வீர மறவர்கள்தான் நாம். ஆனால் எல்லையில் உள்ள இராணுவத்தினர்  தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் என்பதை இந்த நாடு உணருமா?
                   அவர்களுக்காக என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்.
 தனது மகன் பாகிஸ்தானியர்களால் பிடிக்கப்பட்டுவிட்டான் என்ற சேதியைக் கேட்டவுடன் மாரடைப்பால் மரணமடைந்த அந்த மகாராஷ்ட்டிர  மாநில தாய்க்கு இந்த நாடு என்னசெய்யப்போகிறது .
                        எனது அருமைத் தாய்நாட்டு மக்களே ,சிந்தியுங்கள்.!!

                            ye mere vathanki logo, 
                            jara yaadkaro kurpaani.