செவ்வாய், 10 ஜனவரி, 2017

                              அறிவை அறிவால்  அறிந்துகொள்ளும் 
                                      அறிவுத்திருக்கோவில் .
                     
                              திருவாரூர்  மாவட்டம் சன்னாநல்லூரில் கர்னல் கணேசன்  அமைத்துவரும் "அகத் தூண்டுதல் பூங்கா "பற்றி வாசகர்கள் அறிவார்கள்.இந்த பூங்காவில் ஒரு கலந்துரையாடல் இடம் ,ஒரு தியான மண்டபம்  மற்றும் ஒரு நூல் நிலையம்  இருக்கும்.
               இட நெருக்கடி காரணமாக ஒரே கட்டிடத்தில் கீழே நூல் நிலையமும் மேலே தியான மண்டபமும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
                       
                                 நான்கு வழிப்பாதையான மயிலாடுதுறை -திருவாரூர் சாலையில் சன்னாநல்லூரின் எல்லையில் வலது புறமாக அமைந்துள்ளது இந்த வளாகம் .
               நூலகம் முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் பொது மக்கள் உபயோகத்திற்கு திறந்து விடப்படும்.
                    சன்னாநல்லூரின் சுற்றுவட்டார பகுதிகளில்யாராவது ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் நூலகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வந்தால் நன்றாக இருக்கும்.
                     விருப்பமுள்ளவர்கள் கர்னல் கணேசனைத் தொடர்பு கொள்ளலாம்.
                                         044-26163794
                                          0-9444063794.

                                                                                   நன்றி.


























1 கருத்து: