திங்கள், 31 ஜூலை, 2017


                                      உருவமற்ற குரல் .
     
                       பாவாடை-தெய்வானை என்ற பெற்றோர்களுக்குப்  பிறந்த குழந்தைகளுள்  ஒரு ஆண் குழந்தைக்கு அவர்கள் "கணேசன்"என்று பெயரிட்டு வளர்த்தனர் .இவரது வாழ்க்கை அனுபவங்களைப்  படிக்கும்போது "வளர்த்தனர் "என்பது சரியான சொல்லாக இருக்காது."பெயரிட்டனர்" என்பதோடு நிறுத்திக்கொள்ளலாம் .

                            கிராமப்புறத்து நடு மட்ட விவசாயக்குடும்பம் என்பதால் வீட்டில் மனிதர்களுடன் ஆடு,மாடு,கோழி  என்றும் சுற்றுப்புறங்களில் ஆறு,குளம் ,வாய்க்கால் ,வரப்பு என்ற சூழ்நிலைகளுக்கிடையிலேயே  அவர் வளர்ந்தார்.

                                      

                         இன்றைய நாகரீக வாழ்க்கையைப்போல் இல்லாமல் அன்றைய கிராமப்புறத்தில் குழந்தைகள் வளர்ந்த விதம் வித்தியாசமானது.அப்பா நிலபுலன்களைப்பார்க்கவும் அம்மா குடும்பத்ததையும் குழந்தைகளைப்பார்த்துக்கொள்ளவும்அண்ணன் தம்பி அக்காள் தங்கை அவரவர்கள் வேலைகளைப்பார்க்கவும் வேலைக்காரர்கள் ஆடு மாடுகளைப் பார்க்கவும் குழந்தைகள் தாமாகவே வளர்ந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

                       சற்றே படித்த குடும்பத்தில் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லுகையில் விவசாயக்குடும்பத்தில் குழந்தைகள் வளர வளர விவசாய வேலைகளுக்கும் ஆடு,மாடுகள் மேய்க்கவும் ,மீன் பிடிக்க,தோட்டம் தொரவுகள் பார்க்கவும் போய்விடுவார்கள்.

                             பக்கத்து வீட்டு பையன் பள்ளிக்கூடம் போகையில் நான்மட்டும் மாடுமேய்க்கப் போகவேண்டுமா என்று ஒரு துணிப்பையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடம் என்ற அந்த  பவித்திரமான கோவிலுக்குள் நுழைந்தார்கள் கணேசனும் அவரது சகோதரர்களும்.

                                              Image result for thanjavur dt village scene


                       ஐந்தும் மூன்றும் எத்தனை என்றால் ஐந்துக்குப்பிறகு  ஆறு,ஏழு ,எட்டு என்று விரல்விட ஆரம்பித்தார்கள்.காலம் அவர்களைத்தாலாட்டியது.கணிதத்திலும்  விஞ்ஞானத்திலும் ,மொழியிலும் அதுவரையிலிருந்த பதிவுகளையெல்லாம் அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்.

                             கழக உயர்நிலைப்பள்ளிக்கூடம் ,நன்னிலம் என்ற கல்விக்கூடத்தில் 1947, S S LC தேர்வில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றார் அவரது மூத்த அண்ணன் .1957 ல் அதே தேர்வில் 500 க்கு 488 மதிப்பெண் பெற்று பள்ளிக்கூடத்தில் முதல் மாணவனாக வெற்றி பெற்றார் அவரது அடுத்த அண்ணன் .

                      அண்ணன்  தம்பிகளுள் கணேசன் வித்தியாசமானவராக உருவெடுக்க ஆரம்பித்தார்.1949 ல்  மூன்றாம் வகுப்பிலிருந்த கணேசன் அரையாண்டுத்தேர்வில் நான்காம் வகுப்பிற்கும் ஆண்டுத்தேர்வில் ஐந்தாம் வகுப்பிற்கும் மாற்றப்பட்டார்.

                          ஊரில் நான்குபுறமும் குளங்கள் .ஆறும் வாய்க்காலும் வயலும் என எங்குபார்த்தாலும் தண்ணீர்.நடைபயிலுமுன்பே நீச்சல் பழகினார்கள் சகோதரர்கள்.ஊரைச்சுற்றிலும் மரங்கள்.தென்னை மரம் ஏறுவதும் பனைமரம் ஏறுவதும் மற்றகிளைகளுடனான மரங்கள் ஏறுவதும் வித்தியாசப்படும் .எந்த சூழ்நிலையிலும் தன்னைக்காத்துக்கொள்ளும் சுய பாதுகாப்பாக கிராமத்துக்கே உரிய எல்லா கலைகளிலும் வித்தகர்களானார்கள்.

                                            Image result for village scene,swimming climbing tree etc

                                 சுமார் நாலைந்து வயது சிறுவர்களாக கணேசனும் அவரது அண்ணனும் தெருக்கோடியிலிருந்த கிணற்றுக்கு குடிதண்ணீர் கொண்டுவர சென்றார்கள்.சுமார் மூன்றடி கைப்பிடி சுவற்றில் ஏறி நின்று குடத்தில் கயிறு கட்டி தண்ணீர் தூக்கவேண்டும்.சுமார் 15 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்தது.கிணற்றின் உள்ளே இறங்க வளையம் வளையமாக படிகள் சுமார் இரண்டு அங்குலம்  இருக்கும்.அண்ணன் தண்ணீர் தூக்கி குடத்தில் நிரப்ப கணேசன் கிணற்றின் முதல் உள்படியில் இறங்கி நின்றுகொண்டு பாட்டு பாடிக்கொண்டிருந்தார்.காய்ந்திருந்த கிணற்றின் உள்புறம் ஒன்றிரண்டு வாளி தண்ணீர் தூக்குகையில் சிதறிய தண்ணீர் காரணமாக படிந்திருந்த பாசி ஈரமாகிவிட்டது.

                      கண்ணிமைக்கும் நேரத்தில் கணேசன் நின்றிருந்த படி வழுக்கிவிட கணேசன் தடால் என கிணற்றுக்குள் விழுந்தார்.

                            சுவற்றில் எங்கும் அடிபடவில்லை .வாளி மேலே தூக்கப்பட்டிருந்ததால் வாளியில் மோதிக்கொள்ளவில்லை.நீச்சல் தெரிந்திருந்ததால் நீரில் மூழ்கிப்போய்விடவில்லை.ஆகாயத்தில் இறைவெளி பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது.

                     அண்ணனும் சப்தம் கேட்டு ஓடிவந்த இன்னொரு சிறுவனும் சேர்ந்து கயிற்றை கிணற்றில் விட கணேசன் கயிற்றைக்கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மேலேவந்தார்.

                                 வாழ்க்கைச்சக்கரம் உருண்டோடியது.

                   ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடையே சண்டை வர முத்துவேல் என்ற சிறுவன் கணேசனை அடித்துவிட்டு ஓடினான்.கணேசன் அவனை விரட்ட ஆரம்பித்தார்.அப்படி இப்படி ஓடிய முத்துவேல் திடீரென்று குளத்தில் பாய்ந்து நீந்த ஆரம்பித்தான்.கணேசனும் விடாமல் குளத்தில் பாய்ந்து நீந்த நடுக்குளத்தில் முத்துவேலைப் பிடித்துவிட்டார்.மீண்டும் சண்டை.ஒரு நிலையில் முத்துவேலை தண்ணீருக்குள் அழுத்த அவன் மூச்சுவிட முடியாமல் திணற ஒரு நிமிடம் !ஒரே ஒரு நிமிடம்! அவன் இறந்துவிட்டால்......இந்த எண்ணம் மனதில் தோன்ற கணேசன் தனது பிடியைத் தளர்த்திவிட்டு  கரைக்குத்திரும்ப நீந்தினார்.முத்துவேல் அழுதுகொண்டே பின்னால் நீந்தி வந்தான்.

                    அன்று முத்துவேல் இறந்திருந்தால்..........கணேசன் சிறுவர்கள் சீர் திருத்தப்பள்ளியிக்குப் போய் சிறைத்தண்டனை அனுபவித்திருக்கலாம்.

                                         காலம் ஓடியது........

                  ஆரம்ப கல்வி முடிந்து உயர் கல்விக்காக சுமார் 3-4 கி .மீ, தூரத்திலுள்ள நன்னிலம் உயர்நிலைப்பள்ளியில் 6-ம்  வகுப்பில் சேர்ந்தார்.தினமும் 3-4 கி .மீ போகவும் 3-4 கி.மீ  திரும்பவும் என 6-7 கி.மீ நடை,ஓட்டம் ,வழியெல்லாம் விளையாட்டு.சன்னாநல்லூரிலிருந்து முடிகொண்டான் ஆற்றின் கரைவழியேதான் நடை.குறுக்கு வழியென்றால் வயல்வரப்பு,இரண்டு மூன்று வாய்க்கால் தாண்டிப்போகவேண்டும்.சில நேரம் சாலை வழியாகவும் சிலநேரம் குறுக்கு வழியிலும் சிறுவர்களும் சிறுமிகளும் ஓடுவார்கள்.ஊர் சிறுமிகளுக்கு சிறுவர்கள் பாதுகாப்பு வளையம் அமைத்து முன்னும் பின்னுமாக நடப்பார்கள்.

                     சாலையின் இருபுறமும் புளி ,நாவல்,மா தென்னை என மரங்கள் அந்தந்த காலத்திற்கேற்ப பூவும் காயும் கனியுமென்றிருக்கும்.பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் காய்,கனிகளை பறிப்பது வழக்கம்.நாவல் பழ காலத்தில் மரம் ஏறத்தெரியாத ஒரு சிறுவர் கூட்டம் எப்பொழுதும் கணேசன் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும்.

                               அப்படி ஒருமுறை ஒரு கூட்டம் பின்தொடர கணேசன் நாவல் மரம் ஏறினார்.உச்சி கிளையைப்பிடித்து உலுக்க நாவல்பழம் கீழே
உதிர்ந்தது.கீழ் கிளையில் நின்றுகொண்டு மேல்கிளையை உலுக்க திடீரென்று இரண்டு கிளைகளும் முறிந்து கணேசன் கையில் பிடித்த கிளையுடன் கீழே விழ ஆரம்பித்தார்.அதிர்ஷ்ட்ட வசமாக கையில் பிடித்திருந்த கிளை மற்றோரு கீழ் கிளையில் மாட்டிக்கொள்ள  கிளையுடன் தொங்கிக்கொண்டிருந்த கணேசன் வளைந்து ஏறி அடுத்த கிளை  வழியாக கீழே இறங்கினார்.பயத்தில் உறைந்துபோயிருந்த மற்ற சிறுவர்களுக்கு அப்பொழுதுதான் உயிர் வந்தது.

                                தரையில் கால்வைத்த கணேசனை விண்ணும் மண்ணும் ஆசிர்வதிக்க காலமெனும் காட்டாறு கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது.

                       1958  மார்ச் கணேசன் S S L C  தேர்வு எழுதவேண்டும்.வீட்டில் வித்தியாசமான சூழ்நிலை.அம்மா காசநோய் காரணமாக தஞ்சாவூர் மருத்துவ மனையில்.மூத்த அண்ணன் ,அக்காள் ,இளைய அண்ணன் எல்லோரும் வெளி ஊர்களில்.வீட்டில் அப்பா,இரண்டு தம்பிகள் (14,8 வயது) ஒரு தங்கை (10 வயது).காலை 4 மணிக்கு எழுந்திருக்கும் கணேசன் சாதம் வடித்து ,ரசம் வைத்து,பின்னர் அன்றைய தேர்வுக்கான பாடத்தைப் படித்துவிட்டு நன்னிலம் பள்ளிக்குப் புறப்பட்டு ஓடுகையில் அப்பா ஹோட்டலில் இட்டிலி வாங்கி வைத்துக்கொண்டு நிற்பார்.3-4 கி.மீ. ஓடி கலைப் பரீட்சை எழுதுவார்.பின்னர் பள்ளிக்குப் பின்புறமிருக்கும் மதுவனேஸ்வரர் கோவிலில் போய் உட்கார்ந்து பகலுணவு சாப்பிட்டுவிட்டு மாலைத் தேர்வுக்கான பாடத்தைத்திருப்பிவிட்டு  வந்து தேர்வு  எழுதுவார். தேர்வு முடிந்து வீட்டுக்கு ஓடிவந்து மற்ற வேலைகள்,மறுநாள் தேர்வுக்கான ஆயத்தம்.



                                                         Image result for village school

                              தேர்வு முடிந்து வீட்டு வேலைகள்,ஆடு,மாடுகள் பராமரிப்பு ,வயல் வேலைகளில் அப்பாவுக்குத் துணை என்று நாட்கள் ஓடின.என்றோ ஒருநாள் தேர்வு முடிவுகள் செய்தித்தாளில் வந்திருக்கின்றன என்று ஊர் மக்கள் சொல்ல மறுநாள் பழைய பேப்பரில் தனது தேர்வு எண்ணை பார்த்துவிட்டு மற்ற வேலைகளைப்பார்க்க போய்விட்டார்.

                     சுமார் 10-15 நாட்கள் சென்று அவரது மூத்த அண்ணன் ஊருக்கு வந்தார்.கணேசனிடம் mark sheet,Transfer certificate எல்லாம் வாங்கிவிட்டாயா என்று கேட்டார்.அதுவரை அந்த பெயர்களைக் கேள்விப்பட்டிருக்காத கணேசன் விழித்துக்கொண்டு நின்றார்.அண்ணனின் அறிவுரைப்படி பள்ளிக்கு சென்று எல்லாவற்றையும் வாங்கிவந்து அவரிடம் கொடுத்துவிட்டு வயலுக்குப் போய்விட்டார்.

                                     இன்னும் சில நாட்கள் சென்று அண்ணன் வந்து செட்டிநாடு அண்ணாமலை தொழிற்நுட்பக் கல்லூரியில் மூன்றாண்டு படிப்புக்கான interview க்குப் போகவேண்டும் என்று அழைத்துச்சென்றார்.அங்கேயே சேர்ந்துவிட முடிவானது.ஒருசில நாட்களில் கணேசன் சன்னாநல்லூரைப் பிரிய நேர்ந்தது.ஒருமுறை ஆறு,குளம்,வயல்,வாய்க்கால்,ஆடு,மாடுகள் ,மரம்,செடிகொடிகள் எல்லாவற்றையும் கண்கள் கலங்க பார்த்துவிட்டு கணேசன் சன்னாநல்லூரைப்பிரிந்தார் .

                     உருவமற்றகுரல் உருவாக  ஆரம்பித்தது.

                                                                                      (  தொடருவோம் ..........)



                                   Image result for Annamalai polytechnic.chettinad






வியாழன், 20 ஜூலை, 2017


                                        எங்கே போகிறது இந்த                                                 சாலை .
                   கர்னல் பாவாடை கணேசனின்  "அகத்தூண்டுதல் பூங்கா" பற்றி வாசகர்கள் அறிந்திருப்பீர்கள் .தமிழ் நாட்டின் நாலைந்து இடங்களில் இது அமைந்திருந்தாலும்  அவரது பிறந்த ஊரான சன்னாநல்லூரில் இது சிறப்பிடம் பெறுகிறது என்று சொல்லத்தேவை இல்லை    



                இந்த நெடுஞ்சாலையைப் பாருங்கள்.  இது சன்னாநல்லூர் கிராமத்தில் வடக்கு (வலது  -மேலே) தெற்கு சாலை.சென்னையிலிருந்து  தெற்கே செல்லும் கிழக்குக் கடற்கரை சாலைக்கு இணையாக சற்றே உள்புறமாக  இது சன்னாநல்லூர் வழியாக கன்னியாகுமாரி வரை செல்லுகிறது.
           
                               மயிலாடுதுறை -திருவாரூர் என்ற வடக்கு-தெற்கு சாலையும் நாகப்பட்டிணம் -கும்பகோணம் என்ற கிழக்கு -மேற்கு சாலையும் சந்திக்குமிடமே சன்னாநல்லூர் என்று முன்பே பார்த்தோம்.

                            இந்த சாலையை ஒட்டியே மயிலாடுதுறையிலிருந்து வருகையில் வலதுபுறமாகவும்  திருவாரூரிலிருந்து வருகையில் இடது புறமாகவும் அமைந்துள்ளது "அகத்தூண்டுதல் பூங்கா"

                         தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்கள்,வண்டிகள்,வாகனங்கள்  இந்த சாலையில் சென்றுகொண்டிருக்கின்றன.தேடுதல் என்ற அறிவு விளக்கம் பெறவும் அதன் காரணமாக சாதனைகள் புரியவும்,சரித்திரம் படைக்கவும் எண்ணமும் குறிக்கோளும் உடையவர்களுக்கு இது ஒரு சொர்க்க பூமி.

                           திறந்து கிடக்கும் இந்த சொர்க்க வாசலுக்குள் நுழைய நேரமின்றி  மக்கள்  ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.தங்களது அகக்கதவை இறுக்கித் தாளிட்டுவிட்டு  புற உலகில் அறிவையும்,மகிழ்ச்சியையும் ,மனநிறைவையும் தேடித்தேடி அலைகிறார்கள்.

                        இந்தியத்திருநாட்டின் மூவர்ணக்கொடி பட்டொளி வீசி பறக்க  நுழைவாசலின் இருபுறமும் சுவற்றில் சில உந்துசக்தி செய்திகள் எழுதப்பட்டுள்ளன.பள்ளி,கல்லூரி மாணவர்கள் இரு சக்கர வாகனங்களிலும் பேரூந்துகளிலும் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

                          பத்தாவது படித்து முடித்த ஒரு மாணவன் பள்ளிக்கூடத்திலிருந்து நின்று  விட்டு ஒருவருடம்போல் இந்த உலகைப்படிக்கட்டும்.உடலளவிலும் மனதளவிலும் உறுதியானவனாக மீண்டும் அவன் கல்வியறிவைத்  தேடும்  பணி தொடரட்டும் .காலம் அவனை ஒரு மா  மனிதனாக அறிமுகப்படுத்தும்.

                           பெற்றோர்கள் தங்கள் வாரிசு ( ஆண் ,பெண் ) நல்லவிதமாக வளர்ந்து வல்லவனாகவும் நல்லவனாகவும் வரவேண்டும்  என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஒரு உயிர் தனது கர்ம வினைக்கைக்கேற்பவே பிறவி எடுக்கிறது என்பதை அவர்கள் ஆரம்ப காலத்தில் உணர்வதில்லை.காலப்போக்கில்  ஆ,! என்மகனா ? என்று மகிழ்ச்சியிலோ அல்லது ஐயோ ! என் மகனா ?  என்று துக்கத்திலோ  அவர்கள் சப்தமிடும்போது அண்ட வெளி (மறு பெயர் இறைவன் ) அதிர்ந்து சிரிக்கும் போது தெரிந்து கொள்வார்கள் .

                                  தாமே தமக்குச் சுற்றமும்
                                                 தாமே தமக்கு விதி வகையும்
                                 யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர்
                                                 என்ன மாயம் இவைபோகக்
                                 கோமான் பண்டைத் தொண்டரொடும்
                                                அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு
                                போம் ஆறு அமைமின் பொய் நீக்கிப்
                                                 புயங்கன்  ஆள்வான் பொன் அடிக்கே !

               என்பது மாணிக்கவாசகரின் "யாத்திரைப்பத்து "பொன்மொழி. இதையேதான் பகவத் கீதையும் சொல்கிறது.

                       உத்தரேத் ஆத்மனா ஆத்மானம் ந  ஆத்மானம் அவஸாதஏத்!
                       ஆத்மைவ  ஹ்யாத்மனோ பந்துராத் மைவ ரிபு ராத்மன !!

           தங்களைத் தங்களால் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதாம்.இந்நிலையில் ஒருவனது உயர்வுக்கும் தாழ்வுக்கும் மற்றவர்களை எப்படி காரணம் காட்டமுடியும்.



                                                                 
                                          கிராமப்புறத்தில் இப்படி ஆடு மாடுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த ஒருவன் தனது 40 வயதில் இம்மாபெரும் தேசமான இந்தியத் திருநாட்டின் பிரதிநிதிக்குழு தலைவனானான்  என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தால்  உங்கள் மகன் அல்லது மகள் நாளைக்கு சந்திரமண்டலத்திற்குப் போகலாம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் .

                       காலம் பொன்னானது.வாருங்கள்!விரைந்து  வாருங்கள்!!
எங்கே போகிறது இந்த சாலை என்று திகைத்து நிற்காமல்  "அகத் தூண்டுதல் பூங்கா "வுக்கு வாருங்கள்.உங்கள் எதிர்கால சிறப்பான வாழ்க்கைக்கான  வழி கண்டு பயணத்தைத்  தொடருங்கள்.




                     வாழ்க வளமுடன் .வாழ்க வளமுடன் !

















          









செவ்வாய், 11 ஜூலை, 2017


                                     Religeous Teachers in the Army.

                   The Indian Army is considered to be one of the finest patriotic fighting forces of the world.It is not mercenary force as many illiterate politicians think and act.It is a matter of great honour to serve in the Indian Army in any capacity.

                         We all know that the Army consists of teeth and tail, ie fighting forces and supporting forces.Welfare to troops is a function of command.As our Army consists of troops from all religions It is necessary to organise  religious activities to motivate  and also as an outlet for the religious feelings of troops.

                         It is with that intention Religious Teachers who are qualified in the cultural activities of the particular religion are employed in the Army. Their aim is to help troops in religious activities.It is worth noting that they are not to preach or teach religion.

                       The Madras Engineer Group of the corps of Engineers of the Army consists of troops of Hindu,christians and muslims. So generally depending upon the strength of troops Religious teachers are posted.

             In the year 1982 ,then Major Ganesan was posted to 4 Engineer Regiment and the Regiment was located at Jullandar cantt,Punjab state.In the course of routine activity he went to Regimental temple for a saturday pooja.

                       It was there he met a young,very active and quite knowledgeble Religious teacher Nb/Subedar Sivarajan.

                        Sivarajan  hails from Chidamparam,Cuddlore Dt of Tamilnadu and has done "pulavar"course and some experience in "saiva sidhantham".It is customery that on  puja days some men sing few religious songs and Religious Teacher gives 2-3 minutes moral lecture followed by aarthi.

                 Ganesan had deeper and better knowledge about Tamil litrature and life history of many saints.So he was not  impressed by the RT,but appreciated his sincere efforts.Ganesan also guided the RT about how to go about  the weekly pooja.

                      As years passed Sivarajan became very capable RT and conducted all Regimental religious functions very well.

                                           
                   As time passed  Sivarajan was promoted as Subedar.In the year 1984 Ganesan was promoted and appointed as Commanding Officer of 4 Engineer Regiment.
           It was well known to all ranks that Ganesan attaches great immportance to physicalfittness and no one is exempted on this.He explained to subedar Sivarajan that he is a junior commissioned officer and he will have to do duties like all other JCOs including BPET (Battle Physical Efficiency Test) Range practices etc.
              Not only Sivarajan did everythig but did much better than normalJCOs. 

                       

                               Image result for military activities and puja in army



                    These whole hearted participation of Sivarajan earned appreciations from all ranks and he was promoted as Subedar Major. He has served with 4 Engineer Regiment in war and peace,in plains and mountains and  perhaps under 4-5 Commanding Officers. With such an excellent record perhaps he was the first Religious Teacher to be promoted as Subedar Major and later conferred Honourery rank of  Lt and then Captain. 

                      Sivarajan retired and settled at Bombay as his wife and children were used to that style of living and working.But Sivarajan often used to visit Chidamparam and spend some time with his friends and well wishers.

                    It was one such occasion he came to Chidamparam during last week of june 2017.

30-6-2017 was very auspecious day at Lord Nataja temple. The diety gets sandle paste abhishekam only 6 times in a year and 30 june was "ANI THIRUMANJANAM" Sivarajan was so happy that he could make it. Perhaps hundreds and hundreds of times he might have seen this pooja during his childhood and youth.It was soul satisfying now as he was not well and thought that he may not make it.
                         The Divine plan was something different.Sivarajan suffered s massive heart attack on 03 July and expired right at Chidamparam,his birth place.

                                His wife and children rushed from Bombay for the last rights.





                      Many officers who came to know of this have paid great tributes to Sivarajan.one of the officer stated 

"SIVARAJAN WAS A GREAT SOLDIER FIRST THEN ONLY HE IS RELIGIOUS TEACHER."

            MAY HIS SOUL REST IN PEACE.







சனி, 8 ஜூலை, 2017






                                                   THE  COMMAND.

                       In Armed Forces the word "Commanding officer" signifies  the most prestegious appointment.
Every commissioned officer exitingly looks forward to command the unit in which  he was commissioned .
           Officership in the Army is a mixed group where in officers commissioned through National Defence Academy ,Direct entry,Technical entry,Short service commission entry,Army cadet college entry and Special list officers etc serve together.
              Even in NDA Officers there is pristegious Rashtriya Indian Military College ( RIMC popularly called Rimcolins) entry,sainik school entry military school entry etc.
            A commissioned officer   gets promotion in about 15-16 years service to the rank of Colonel which is the rank of commanding officer of a major unit like a Battalion,Regiment.
             In this scenario Pavadai Ganesan was commissioned as Emergency commission in1964 and was granted Permanent Regular commission in 1965.
                   He was one of the fittest officer,taking Army life as Dolphin in deep sea.He was awarded best sports person in Atheletics,Basketball,and Swimming.He was in high order of merit in all his courses of instruction.
                         He was well disciplined,high integrity and upright in all his dealings.
       He was commissioned in independent 44 Field Park Company in 1964 and was a member of the officers group which formed 4 ENGINEER REGIMENT in 1966 on Re organisation of Engineer Regiments.
         He got the unique distingtion of first COLONEL CommandingOfficer of 4 Engineer Regiment in 1987 (took command in 1984 in the rank of Lt Col and promoted as Colonel in 1987 in situ )
              During the tennure of 3 years he served under 5 Major Generals who were his reporting officers.His unit was directly under a Division,a Core and Command at different times.
               Irrespective of  how the unit is placed  his performance as commanding officer was matchless.
            At one stage his unit was under administrative control of a Sub Area,and operational control of Northern Command.Here he was not yielding to the petty and silly requirements of Sub Area commander and had heated orguements with him occasionally.
                This is the letter he wrote to the Sub Area Commander,



THERE IS  ALWAYS A CONFLIGHT ESPECIALLY IN THE ARMY ABOUT WHAT ONE

WANTS TO DO  AND WHAT  HIS SUPERIOR  WANTS HIM TO DO.

                                 THAT IS THE REASON FOR NOT POSTING THIS LETTER.









                                           Image result for MILITARY ACTIVITIES INDIAN








புதன், 5 ஜூலை, 2017

                 
                              வை யவன்  என்ற  MSP முருகேசன் .

             விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.இதற்கு விளக்கம் சொல்லமுடியாது.விளக்கத்திற்கு உட்பட்டு ஒரு நிகழ்வு நடந்தால் அது முதலிலேயே எதிர்பார்க்கப்பட்டஒன்று  என்று ஆகிவிடும்.விபத்துகள் விபத்துகளேயன்றி அதற்கு விளக்கம் சொல்லமுடியாது.

                     அப்படிப்பட்ட ஒரு இனிமையான விபத்துதான் திரு வையவன் அவர்களின் சந்திப்பு.
                     
                       எனது தென்துருவ அனுபவங்கள் பற்றி பேசுவதற்கு தங்களது அமைப்புக்கு வரமுடியுமா என்று கேட்பதற்காக ஒரு முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் 2012 ம் ஆண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார்.பேசிக்கொண்டிருக்கும்போது ,சார்,நீங்கள் வையவன் அவர்களை சந்தித்திருக்கிறீர்களா ?என்று கேட்டார்.

                  சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றேன் .
                     இப்பொழுதே  ஏற்படுத்திக்கொள்ளலாம் என்ற அவர்
         வையவனுடன் கைபேசியில் தொடர்புகொண்டு கைபேசியை என்னிடம்                                                     தந்தார்.
           அது ஒரு மகத்தான நேரமாக இருந்திருக்கவேண்டும்.

                                எந்த சுமார் 5 ஆண்டுகளில் ஏதோ வேலை செய்தோம் ,எழுதினோம் என்றிருந்த கர்னல் பாவாடைகணேசன் என்பவரை கிட்டத்தட்ட உலகத்தமிழர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்திவிட்டார் திரு வையவன்  அவர்கள்.
             
                   அவர் எழுத்தாளர், proof reader, wrapper designer,பதிப்பாசிரியர் ,கவிஞர்  என்று பன்முகப் பரிமாணம் அதிலும் விஸ்வரூபம் எடுப்பவர் என்பதால் அவர் மூலமாக வெளிவரும்  நூல்கள் பரவலாகப் பேசப்படுகின்றன.

                                           இது அவர் முயற்ச்சி எடுத்த எனது  முதல் நூல்.

  அதன்பிறகு பல நூல்கள் வெளிவந்துவிட்டன.எண்ணிக்கை தொடர்கிறது.தாரணி பதிப்பகம் என்ற பெயரில் பதிப்பிக்கப்படுகிறது.அவரது உதவியில் வந்த எனது மற்ற நூல்கள்,

     மற்றவர்களுக்காக எழுதுவதும் பதிப்பிப்பதுவும் இல்லாமல் அவரது கைவண்ணத்தில் ,இலக்கிய வேள்வியில் பல கவிதை,கட்டுரைகள்,நாவல்கள்,ஆய்வக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன.உதாரணத்திற்கு ஒன்று சில நாட்களுக்குமுன் பதிப்பித்த பாரதி பற்றிய ஆய்வு நூல்.


             பாரதி பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன.கடுகைத் துளைத்து ஏழ் கடலைப்புகுத்தியதுபோல் எல்லா நூல்களையும் விலக்கி வைத்து பாரதியை புதிய கோணத்தில் அறிமுகப்படுத்துகிறார் வையவன் .

                         பாரதியின் விஸ்வ ரூபா தரிசனத்தில் ஆரம்பித்து  பாரதி என்னுமொரு மானுடன் என்று 23 ஆய்வுகளில் 183 பக்கங்களில் மிக அற்புதமான முறையில் பாரதியின் எல்லா எழுத்துக்களையும் அறிமுகப்படுத்துகிறார்.

                      பள்ளிக்கூடங்கள்,கல்லூரிகள் ,மேடைப்பேச்சாளர்கள்,இலக்கியவாதிகள் எல்லோரிடமும் இருக்கவேண்டிய நூல் இது.

                                       
                              வாழ்க வையவன் !  வளர்க அவரது கைவண்ணம்.











செவ்வாய், 4 ஜூலை, 2017



                                                  எங்கிருந்தோ  வந்தார்.
           
                          இராணுவத்திலிருந்து 1994 ல் 52  வயதில்   ஒய்வு பெற்றார் கர்னல் கணேசன்.ஒய்வு என்பது ஒரு குறிப்பிட்ட  பணியிலிருந்து விடுவிப்பு என்பதைத்தவிர வேறு பொருளை தாமாகவே கற்பனை செய்துகொள்ளும் மனிதரல்ல கணேசன்.
                      இளமை முதலே தீவிர நாட்டுப்பற்றும் இலக்கிய மற்றும் கவிதைகளில் ஈடுபாடும்  கொண்டவர் என்பதால் ஒய்வு என்பதற்கு தான் ஆர்வம் காட்டும் பல பணிகளில் ஒன்றிலிருந்து விடுவிப்பு என்று ஏற்றுக்கொண்டு மிக சாதாரணமாக அடுத்தநாளைத்  தொடர்ந்தார் .

                         மனித வாழ்க்கை ஒரு அற்புதமான பரிசு என்பதை  நாம் அறிவோம் .ஒவ்வொரு நிகழ்வுகளும் ,நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நமக்கு புதுப்புது பாடங்களை சொல்லித்தருகிறார்கள்.அப்படியிருக்க ஒரு மனிதன் எப்படி ஒதுங்கியிருந்து ஓய்வெடுக்கமுடியும்?

                             ஆகையினால் கணேசன் தனது ஆடுகளத்தில் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார் .பல புதிய பாதைகள் திறந்தன,பல புதிய மனிதர்களின் சந்திப்பு ஏற்பட்டது.

                                அப்படி அறிமுகமானவர்தான் திரு ஹரிஹரசுப்ரமணியன் அவர்கள்.தீவிர நாட்டுப்பற்றுக் காரணமாக Indian Institute of Governance என்ற அமைப்பை ஏற்படுத்தி பல மாமனிதர்களை சந்தித்து இந்த இந்தியத்திருநாட்டிற்கு தம்மால் முடிந்ததை செயல்படுத்தி வருகிறார்.

                            இராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இராணுவத்தினரை பெரிதும் மதித்து மரியாதை கொடுப்பவர்.

                   கர்னல் கணேசன் தனது 30 ஆண்டு பணிக்காலத்தின் நிகழ்வுகளிலிருந்து தனது அனுபவத்தைத் தொகுத்து சுமார் பத்து நூல்கள்  எழுதியிருக்கிறார்.எல்லாமே தேசப்பற்றுடைய கதை,கட்டுரைகள்.

                               a) வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத்துளிகள்.
                               b)இராணுவம் அழைக்கிறது.
                               c)எல்லைப்புறத்தில் ஓர்  இதயத்தின் குரல்.
                               d)கல்  சொல்லும் கதை.(தமிழ்,ஆங்கிலம் )
                               e)எண்ணத்தளவே வாழ்க்கை .
                               f)இலக்கைத்தேடும் ஏவுகணைகள் .
                               g)மண் மேடுகள்.
                               h)சங்கமமாகும் சில இணை கோடுகள் .
                               j)சரித்திரம் படைக்கத் தயாராகும் சன்னாநல்லூர்.
                               k)அகத்தூண்டுதல் பூங்கா

           இவற்றில் பல நூல்களை திரு ஹரிஹர சுப்ரமணியன் படித்திருக்கிறார்.சில நூல்களைத் திரும்பத் திரும்ப படித்து கணேசனுடன் உரையாடியிருக்கிறார்.

                      இலக்கைத்தேடும் ஏவுகணை நூல் இராணுவ வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் அப்பொழுது கணேசன் எடுத்த முடிவுகள் பற்றியது.இதை பலமுறை படித்திருந்தாலும் சமீபத்தில் அவர் அனுப்பிய செய்தி  இது.






Col.ji
Was reading a few pages starting from your marriage to u taking over the Lt.col position in Leh.
I am not that amazed at your disciplined mind because it its extensive and passionate working with one of the finest Army in the World,but truly amazed to see your narrative flowing like Ganges.
Like in a river you take bath at one point or stretch of it and happily tell the world that I bathed in Ganges,take any page and read it gives the pleasure of going through the entire book.
In your previous birth u should have been a Patriotic writer,may be rubbing shoulders with MahaKavi and the like.
U are a measure of what this Great India is.
U will run a State or a Country in the event of another birth.
Pranams
Hariharan

              இப்படி மனம் திறந்து படிக்கவும் பாராட்டவும் எத்தனைப்பேரால் முடியும்.
                     இப்படிப்பட்டவரை நண்பனாய்,நல்லாசிரியனாய் ,குருவாய் பெற என்ன தவம் கணேசன் செய்திருக்கவேண்டும் .

                       இம் மாபெரும் இந்தியத்திருநாட்டில் பலப்பல கணேசன்களும் ஹரிஹரசுப்ரமணியன்களும் பரவலாகக் காணக் கிடைப்பார்கள் .ஆனால் யார் அடையாளம் காண்பது.
           
                   என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?